புதன், 14 மே, 2025

 கடவுளைக் காண முடியுமா?

நாம் அன்றாட வாழ்க்கையில்  வெவ்வேறு விஷங்களைத் தேடி அலைகிறோம். நம்மில் ஒரு சிலரே கடவுளை நினைக்கிறோம். 

நினைவு அல்லது எண்ணம் எதிலிருந்து உற்பத்தியாகிறது? அதன் அவசியம் என்ன? மனதிலிருந்து எண்ணங்கள் உற்பத்தியாகின்றன. எண்ணங்கள்தான் ஒருவரின் வாழ்க்கையை  நடத்த   அவசியமானவை. நம் எண்ணங்கள் அனுதினமும் நடக்கத் தேவையானவற்றைத்தான் நினைக்கிறது. கடவுள் என்ற ஞாபகமே வருவதில்லை. கடவுள் என்பவர் ஓர் அமானுஷிய சக்தி என்று பெரியவர்கள் சொல்லி நாம் அறிவோம். அதைத் தவிர நமக்கு ஏதும் தெரியாது. கடவுளைக் குறித்து புராணக் கதைகளிலிருந்து தெரிந்துள்ளோம். ஆனால் சொந்த அனுபவம் நமக்கு இல்லை. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் எழுதிய தெய்வீகப் பாடல்கள் மூலம் ஓரளவிற்கு கடவுளின் பெருமையை உணர்கிறோம். நம்மைப் பொறுத்தவரை ஆசைப்படுவதை நிறைவேற்றுபவர் மற்றும் ஆபத்துக் காலங்களில் காப்பாற்றுபவர் கடவுள் என்று நினைக்கிறோம். அதற்கு மேல் அவரைக் காண வேண்டும் என்று நினைப்பதில்லை. முக்கால்வாசி மனிதர்கள் கடவுள் இருக்கிறார் என்பதையே ஒப்புகொள்வதில்லை. ஓரளவு நம்புபவர்கள் கூட கோவில்களில் அவரைக் காண்கிறோமே, அதுவே போதும். என்கிறார்கள். 

ஆனால்  20 ம் நூற்றாண்டிலேயே கடவுளைக் கண்ட பல மகான்கள்  வாழ்ந்துள்ளனர். ஸ்ரீ சாயிபாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் ரமண மகரிஷி போன்றவர்கள் கடவுளைக் கண்டு அனுபவித்துள்ளார்கள். 


கடவுளைக் காண கீழ் கண்டவை  மிகவும் அவசியம்.

# கடவுள் இருக்கிறார் என்ற தீவிர நம்பிக்கைத் தேவை

# கடவுளிடம் பக்தி மற்றும் ஆழ்ந்த அன்பும் வேண்டும்

#கடவுளைக் நேரே காண வேண்டும் என்ற நெஞ்சத் தவிப்புத் தேவை

ராமகிருஷ்ண பரம ஹம்சர் கூறினார்" நீ தேவியிடம் முறையீடு! அவளை சதா சர்வக் காலமும் கூப்பிட்டு அழு.. "நான் உன்னைக் காண வேண்டும் ! நீ தரிசனம் தராவிடில் என் உயிரை விடுவேன். " என்று புலம்பு. தேவி கண்டிப்பாக ஒரு நாள் உன் முன் தோன்றி அருள் புரிவாள். ஏனெனில் அவள் உன் அன்னை அன்றோ. சேயின் புலம்பலை எவ்வளவு காலம் அவளால் பொறுக்க முடியும்? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக