வியாழன், 9 நவம்பர், 2017

மனமடங்கில்....

நம் அன்றாடைய வாழ்வில் பற்பல இன்பத் துன்பங்களை சந்திக்கிறோம். அவற்றின் விளைவாக வரும்காலங்களில் மேலும் பல நிகழ்வுகளை தொடர்ந்து அனுபவிக்கப் போகிறோம். ஆனால் இவை அனைத்துமே நமக்கு நிலைத்து நிற்கும் இன்பத்தையோ சாந்தியையோ தருவதில்லை.

கடைக்கரைக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள்.  கடல் அலைகள் ஆரபாரித்துக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக வந்துக் கொண்டிருக்கும். இவ்வாறேதான் நம் மனமும் அல்லும் பகலும் இடைவிடாது எண்ண அலைகளை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது. 

எண்ணங்களால் நாம் என் துன்பப்பட வேண்டும்? எண்ணங்களின் தாக்கம் நம்மை செயல் செய்ய தூண்டுவதால்தான். செயல்களில் சில நன்மை பயக்கின்றன; சில தீமை பயக்கின்றன. புத்தியினால்தான் நன்மை தீமை தன்மையயை நம்மால் அறிய முடியும். எண்ணத்தை செயல்படுத்தும் முன் அதன் விளைவுகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிந்திக்காமல் செய்யும் எந்தச் செயலும் இடர்பாடு தரும்.

நாம் காட்டில் வாழும் மிருகங்கள் அல்ல. மக்கள் கூட்டத்தில்                            சட்ட திட்டங்களை அனுசரிக்கும்  நாகரிகமானவர்கள். பலனை எண்ணி நாம் செயல்களை செய்கிறோம்.  அச்செயல் நமக்கு அன்றி மற்றவர்களுக்கும் ஊரு விளைவிக்காததாக இருக்க வேண்டும். நம் செயல் சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தக் கூடாது. இதனால்தான் நம் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி செம்மைவழியில் சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். நல்லது கெட்டத்தை எவ்வாறு அறிவது?  அதற்கு நம் மனசாட்சியே உற்றக் கருவி எனலாம்.

மனம் எண்ணங்களை உற்பத்தி செய்யும் சாதனம் என்றால் அதன் விளைவுகளை அறிய புத்தியை பயன்படுத்துகிறோம். அதன் தன்மையை அறிய மனசாட்சியே சிறந்த துணை. நாம் என்ன எண்ணினாலும், மற்றும் செய்ய நினைத்தாலும், ஒரு குரல் சரி, தவறு என்று கூறுகிறது. அக்குரலே மனசாட்சி.ஒருவருக்கு தீங்கு செய்ய நாம் எண்ணும்போது மனசாட்சி அது தவறு என்றுரைக்கும். அதை அலட்சியம் செய்து தீச்செயலை நாம் செய்தால் அதற்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டி வரும்.

நம்மில் பலர் மனதை அடக்க முடிவதில்லை, அது தறிக்கெட்டு ஓடுகிறது , என்று சொல்ல கேட்டிருக்கிறோம். ஒரு குதிரையை பழக்குவதைப் பார்த்திருக்கிறீர்களா? முதலில் அது யாரையும் அதன் அருகில் வரவோ ஏறவோ அனுமதிக்காது. அருகில் சென்றால் எட்டி உதைக்கும்.  அதைப் பழக்குபவர் மெல்ல மெல்ல அதன் தேவைகளைக் கவனிக்கத் தொடங்குவார். உணவு கொடுப்பது, லாயத்தை சுத்தம் செய்வது,  அனைத்து பணிகளையும் அவரே செய்வார். குதிரை சிறிது சிறிதாக அவர் வசம் வரும். பிறகுதான் அதன் மேல் ஏறுவது, ஓட்டப் பயிற்ச்சி அளிப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுவார். மனமும் குதிரையைப் போன்றதே.  அதை அடக்கப் பயிற்சித் தேவை.

நாம் பழகும் மனிதரின் சொல்லும் செயலும், நம் மனதை பாதிக்கின்றன. அவை தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. இதைத் தவிர வெளிஉலக நிகழ்வுகளும் நம் மனதை உலுக்குகின்றன. இவற்றால் நம்முள் எண்ணங்கள் உருவாக்கப்படுகின்றன. அலைபாயும் கடலைவிட மனம் மோசமாகக் கொந்தளிக்க ஆரம்பிக்கிறது. மனதை பாதிக்கும் நிகழ்வுகளுக்கு நாம் தீர்வு காண விழைகிறோம். நம்மால் செயல்புரிய  முடியும் விஷயங்களுக்கு தீர்வு காணலாம்.  வெளியுலக நிகழ்வுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.   'மனசாந்திக்கு என்ன வழி?' என்பதுதான் நம் பிரச்சனை. 

மனம் எப்போது அமைதியடையும்? ஆசைகள் குறைந்தால்தான் மனம் அமைதியடையும்.  ஆசைகளை எவ்வாறு குறைப்பது? தேவைகள் குறைந்தால்தான் ஆசைகள் குறையும். உதாரணமாக ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்குகிறோம். விலைமிகுந்த தேவையற்ற படோடபமான ஆடைகளை வாங்குகிறோம். பல ஆடைகளை பிறகு அணியாமல் வீட்டிலேயே வைத்திருக்கிறோம். ஒரு தீபாவளிக்கு சாதாரண ஆடைகளை வாங்கி மிச்சப்படும் பணத்தில் ஏழைகளுக்கு நாம் துணி வாங்கித் தரலாமே?

உண்ணும் உணவு, வாழ்க்கை நடைமுறை, அனைத்திலும் எளிமை மற்றும் படோடபமின்மையை அனுசரித்தால்  கண்டிப்பாக ஆசைகள் குறையும். வாழ்வின் குறிக்கோள் ஆசைகளை நிறைவேற்றுவது என்பதற்குப் பதிலாக மனதை அடக்குவது என்று கொண்டால் அதன் வழிமுறை தெரியவரும்.

மனமடங்கில் என்ன ஆகும்? மனமடங்கில்  மதித் தோன்றிடும்.   மதி என்பதை ஞானம் எனக் கொள்ளலாம். ஞானம் என்பது அறிவின் முதிர்ந்த நிலை. வாழ்வின் உண்மையை உணரும் நிலை அது. மதி தோன்றியதும் நம் பிறவிப் பயனை அடையும் மார்க்கம் தெரியவரும். பிறவிப் பயன் "நான் யார்?" என்பதை அறிவதுதான். ஞானத்தால்தான் அதை அறிய முடியும். 'நான்' என்பது இவ்வுடல் அல்ல; மனம், புத்தி, மற்றும் பஞ்சக் கரணங்கள் அல்ல.  அது அனைத்துக்கும் வேறுபட்ட ஆத்மனே ஆகும். அந்த உண்மையை புத்தியினால் அறிய முடியாது. பல வருட சாதனைச் செய்து மனதை அடக்கி முடிவில்தான் அதை அடையலாம். 
    

புதன், 8 நவம்பர், 2017

மனமடங்கில் ........
நம் அன்றாட வாழ்வில் பற்பல இன்பத் துன்பங்களைச் சந்திக்கிறோம். அவற்றின் விளைவாக வரும்காலங்களில் மேலும் பல நிகழ்வுகளையும் தொடர்ந்து அனுபவிக்கிறோம். ஆனால் இவை அனைத்துமே நமக்கு நிலைத்து நிற்கும் இன்பத்தையோ சாந்தியையோ தருவதில்லை.

நீங்கள் கடற்கரைக்குச் சென்றிருக்கிறீர்களா? அங்குக் கடல் அலைகள் ஒன்றின்பின் ஒன்றாக ஆரவாரித்துக் கரைக்கு வந்து கொண்டிருக்கும். ஒரு வினாடி நேரம் கூட ஓயாமல் அலைகள் புரண்டு வந்து கொண்டிருக்கும். நம் மனமும் அல்லும்பகலும் ஓய்வொழிவில்லாமல் எண்ண அலைகளை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது.

எண்ணங்களால் நாம் ஏன் துன்பப்பட வேண்டும்? அவை வருவதுடன் நிற்பதில்லை. அவை நம்மைச் செயல் செய்யத் தூண்டுகின்றன. அச்செயல்களில் சில நன்மை பயக்கும்; மற்றும் சில தீமை பயக்கும். எவை நல்லவை, எவை தீயவை என்று அறிய நாம் நம் புத்தியை  உபயோகிக்கிறோம். எண்ணங்கள் தோன்றியதும் சிந்திக்காமல் செயல்படத் துவங்கினால் சமயத்தில் அவை நம்மைப் பெரும் இடர்பாட்டில்  சேர்த்து விடும். எந்தச் செயல் செய்யமுற்படும் முன்னும் அச்செயலின் விளைவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் அனைவரும் காட்டில் வாழும் மிருகங்கள் அல்ல. ஓர் ஊரில் மற்ற மக்களுடன் சிலபல சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழும் நாகரிக மனிதர்கள். நம் செயல் நமக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது முக்கியமே. ஆனால் அது மற்றவர்க்குத் தீங்கிழைக்குமேயானால் அதை நாம் தவிர்க்க வேண்டும். நம் செயல் சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தக்கூடாது. இதனால்தான் நம் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி செம்மைவழியில் சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எது நல்லது, எது கேட்டது என்று எப்படி அறிவது? நல்லது, கேட்டது அறிய நம் மனசாட்சியே உற்றக் கருவி எனலாம்.

மனம் எண்ணங்களை உற்பத்தி செய்யும் சாதனம் என்றால் அதன்  தாக்கங்களை அறிய புத்தியை பயன்படுத்துகிறோம். அதன் தன்மையை அறிய மனசாட்சியே சிறந்த துணை. நாம் என்ன நினைத்தாலும் மற்றும் எந்தச் செயல் செய்யும்முன்னும் நம்முள் ஓரு குரல் இது சரி; இது தவறு என்று கூறும். இந்தக் குரலே மனசாட்சி. நாம் ஒருவர்க்குக் கெடுதல் நினைக்கும்போது மனசாட்சி அது தவறு, என்றுரைக்கும். நாம் அதை அலட்சியம் செய்து தீயச்செயல் செய்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

பலர் மனதை எங்களால் அடக்க முடியவில்லை அது தறிக்கெட்டு    ஓடுகிறது என்று சொல்ல கேட்டிருக்கிறோம். ஒரு குதிரையைப் பழக்குவதைப் பார்திருக்கிறீர்களா? முதலில் அது யாரையும் அதன் மேலேற அனுமதிக்காது. அருகில் சென்றால் எட்டி உதைக்கும். அதைப் பழக்குபவர், அதன் தேவைகளை முதலில் தானே கவனிப்பார். குதிரைக்குப் புல் மற்றும் கொள் கொடுப்பது; அதைக் குளிப்பாட்டுவது. தினமும் அதன் இருப்பிடத்தைச் சுத்தம் செய்வது அதன் தேவைகளைக் கவனித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் குதிரையை தன்வசப்படுத்துவார்.  பிறகுதான் அதன் மேலேறி அதை ஓட்டப் பழகுவார். மனமும் ஒரு குதிரையைப் போன்றதே. அதை அடக்கப் பயிர்ச்சித் தேவை.

நம் மனதை பல மனிதர்களின் சொல்லும், செயலும், நிகழ்வுகளும்  பாதிக்கின்றன. நம் மிக நெருங்கிய உறவுக்காரர்கள் மற்றும் நண்பர்கள் கூறுவது நம் மனதில் பெருமளவில் தாக்கங்களை உண்டாக்குகின்றன. வெளியுலகில் நடைபெறும் சோகநிகழ்வுகள் மற்றும் அசாதாரணச் சம்பவங்களும் நம் மனதை உலுக்குகின்றன. நம் எண்ணங்கள் இவற்றால் உருவாக்கப்படுகின்றன. அலைபாயும் கடலைவிட அது மோசமாகக் கொந்தளிக்க ஆரம்பிக்கிறது. மனதை பாதிக்கும் நிகழ்வுகளுக்குத் தீர்வு காண நாம் விழைகிறோம். நமக்குத் தொடர்புள்ள நிகழ்வுகளுக்கு நம்மால் ஏதாவது செய்ய முடியும். வெளியுலக நிகழ்வுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. மனதை எவ்வாறு சாந்தநிலைக்குக் கொண்டு வருவது என்பதே நம் பிரச்சனை. மனம் எப்போது அமைதியை அடையும்? ஆசைகள் குறைந்தால்தான் மனம் அமைதியாகத் தொடங்கும். ஆசைகளை எவ்வாறு குறைப்பது? தேவைகளை குறைத்தால்தான் ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியும். உதாரணமாகத் தீபாவளியின்போது ஒவ்வொரு வருடமும் புத்தாடைகளை வாங்குகிறோம். விலைமிகுந்த படோடமான ஆடைகளாகப் பார்த்து வாங்குகிறோம். முன்பு வாங்கிய துணிகளையே திருப்பித் திருப்பி வாங்குகிறோம். பல ஆடைகளை அணியாமல் வைத்துள்ளோம். ஒரு தீபாவளிக்கு நாம் சாதாரண உடைகளை வாங்கிக் கொண்டு அதில் மிச்சமான பணத்தை ஏழைகளுக்குச் செலவிடலாமே?

உண்ணும் உணவு, வாழ்க்கை நடைமுறை, அனைத்திலும் எளிமை  மற்றும் படடோபத்தைக் குறைத்தால் கண்டிப்பாக ஆசைகள் குறையும். 
வாழ்வின் குறிக்கோள் செல்வந்தனாக ஆவது என்பதற்குப் பதிலாக மனதை அடக்குவது என்று கொண்டால் கொஞ்சம் கொஞ்சமாக மனம் அடங்கும்.

மனமடங்கில் என்ன ஆகும்? மனமடங்கில் மதித் தோன்றிடும். மதி  என்றால் என்ன? மதி என்பது புத்தி. புத்திதான் எப்போதும் இருக்கிறதே அதற்கு மனம் ஏன் அடங்க வேண்டும்? புத்தி என்பது பகுத்தறியும் தன்மை என்று நம் நூல்கள் சொல்கின்றன. நம் புத்தி ஆசைகள் நிறைந்த மனதில், சரிவரச் செயல்படுவதில்லை. ஆசைகள் அடங்கிய நிச்சலனமான மனதில்தான் புத்தி உண்மையாக வேலை செய்யத் தொடங்கும். அந்தப் புத்திக்குதான் மதி என்று பெயர்.

அந்த மதி தோன்றியதும் அதன் மூலம் நாம் நம் பிறவிப்பயனை அடையும் மார்க்கம் தெரியவரும். நம் பிறவியின் முக்கிய நோக்கமே பிறவிப்பயனை அடைவதுதான். பிறவிப்பயன் என்பது என்ன? ‘நாம் யார்?’ என்றறிவதே அது. நாம் இந்த உடல் அல்ல; மனம் அல்ல; பஞ்சக் கரணங்கள் அல்ல; மற்றும் புத்தி அல்ல. அனைத்துக்கும் அப்பால் உள்ள ஆத்மனேயாகும் எனும் அறிவு உண்டாக வேண்டும். அதுவே பிறவிப்பயன். இந்த அறிவு படிப்பதால் ஏற்படாது.      புத்திப்பூர்வமாக உணர்வதால் ஏற்படாது. அது அனுபவரீதீயாக உண்டாக வேண்டும். அதற்குச் சாதனைத் தேவை.          

சனி, 28 அக்டோபர், 2017

உத்தமர்கோர் ஆலயம்

உத்தமர்கோர் ஆலயம்
அனைத்து மனிதரின் செயல்பாடுகளும் சிந்தனையும் ஒத்தத்தன்மை உடையவை. நம் உள்ளத்தில் முதலில் தோன்றுவது ‘நான்’ மற்றும் ‘எனது’ எனும் எண்ணங்களே. தன்னுடைய நன்மைகள் மற்றும் உறவினரின் நன்மைகள் இவற்றிலேயே ஒருவரின் மனம் செல்லும். குடும்ப வாழ்க்கை செல்வத்தைச் சம்பாதித்து அதைச் சேகரிப்பதிலேயே வாழ்க்கை முழுவதும் செலவழிகிறது. இந்த வாழ்க்கைதான் உண்மை. இதில் மேன்மை பெறுவதுதான் லட்சியம் என்று சிறு வயது முதல் போதிக்கப்பட்டு நாம் அதை அடைய பாடுபடுகிறோம். 

ஆனால் உண்மை என்ன? வாழ்க்கை என்பது ஒரு சுழல். அதில் நன்மையும் தீமையும் கலந்திருக்கின்றன. விளைவுகளான மகிழ்ச்சியும் வேதனையும் நம்மைத் திக்குமுக்காட செய்கின்றன. நம்மில் யாராவது நான் இன்று சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்கிறோமா? நமக்கு என்றும் எப்போதும் மனதில் குறை உள்ளது. நிறைவேறாத ஆசைகள் ஏமாற்றங்கள் என்று பற்பல குறைகள் உள்ளன.

இவற்றுக்கேல்லாம் தீர்வு என்ன? மனம் அடங்குவதே இதற்கு மார்க்கம் எனலாம். மனத்தை அடக்குவது நாய்வாலை நிமிர்த்துவதைப் போன்ற செயலே. மனத்தைச் சிறிது அடக்க முயன்றாலும் அது விஸ்வருபம்  எடுத்துப் பேயாட்டம் ஆடுகிறது. வேண்டாததையே எப்போதும் சிந்திக்கிறது; நல்லதிற்கும் கெட்டதிற்கும் வித்தியாசம் தெரிவதில்லை. ஓய்வேயில்லாமல் தூங்கும்போதும் கனவு கண்டு தொல்லை தருகிறது. நிம்மதியும் சாந்தியும் எப்போது ஏற்படுகிறது? மனதில் எண்ணவோட்டம் இல்லாதபோதே சாந்தி கிட்டுகிறது. ஆனால் நாம் அந்நிலையை அடைவது எவ்வளவு கடினமாக உள்ளது?

கடவுள் நாமத்தை உச்சரிப்பதின் மூலம் மனசாந்திப் பெற முடியும்  என்கிறார்கள். ஆனால் அனுபவத்தில் நாமம் ஜபிக்க ஆரம்பித்தவுடன் எண்ண அலைகள் ஆயிரக்கணக்கில் வர ஆரம்பிக்கின்றன. அவற்றை அடக்க முயற்சித்தால் அசுர வேகத்துடன் அவை பல்லாயிரக்கணக்கில் பெருகி கொஞ்சநஞ்ச நிம்மதியையும் கெடுக்கின்றன. ஜபம் செய்யும்போதும் தீய எண்ணங்களும் மனதில் முளைகின்றன. அவற்றை அடக்கும் வழி தெரிவதில்லை. இதற்கெல்லாம் தீர்வு என்ன?

ஓரு குழந்தையை எழுதப் பழக்குகிரீர்களா? குழந்தையின் கையைப் பிடித்து மெதுவாக எழுத வைக்க வேண்டும். அது முதலில் மிகவும் சிரமப்படும் நாலைந்து மாதத்திற்குப் பிறகுதான் மெதுவாக எழுத ஆரம்பிக்கும். நம் மனமும் குழந்தையைப் போன்றதுதான். அதைக் குழந்தை என்பதைவிடக் குரங்கு என்றே சொல்லலாம். வினாடிக்கு வினாடி அது ஒரு கிளையிலிருந்து மற்றோன்றுக்குத் தாவும். நாயை பழக்குவது சுலபம்; அதே குரங்கை பழக்குவது மிகக் கடினம்.

மனதை அடக்கப் பொறுமை மற்றும் பழக்கும்திறன் வேண்டும். எதுவுமே செய்யப் பயிர்ச்சி தேவை. சமையல் செய்யத் தொடங்கும்போது  கடினமாகவும் அயர்ச்சி கொடுப்பதாகவும் இருக்கும். ஆனால் தொடர்ந்து அதில் ஈடுபடுவதன் மூலம் சில மாதங்களில் தேர்ச்சிப் பெற முடியும். மனதை அடக்க அது செல்லும் பாதைகளை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைப் பருவம் மற்றும் வளரும் காலங்களில் ஏற்பட்ட சில நிகழ்வுகளின் தாக்கங்கள் மனதில் வடுக்களாக இருக்கும். அவற்றின் பாதிப்புகள் வாழ்க்கை முழுவதும் தொடரும். நம் மனம் கடந்தக்காலம், நிகழ்காலம், மற்றும் வரும்காலம்  என்ற மூன்றைப் பற்றியே சிந்தித்து வரும். அதைத் தவிர வேண்டாத கற்பனை மற்றும் கனவுகாட்சிகளும் நம்மைப் பதிப்புக்கு உள்ளாக்கும்.

நம் நாட்டில் பல மஹநீயர்கள் தோன்றி இருக்கிறார்கள். அவர்கள்  ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைந்துள்ளார்கள். தாம் உயர்வை அடைந்ததும் மற்றவர்பற்றிக் கவலைக் கொள்ளாமல் அவர்கள் திருப்தி அடையவில்லை. தம் வாழ்க்கையைத் தியாகம் செய்து      பல்லாயிரக்கணக்கானவரை தூய மார்கத்தை அடைவதற்கான வழியைப் போதித்து அவர்கள் வாழ்வு செம்மை அடைய செய்துள்ளார்கள். சாதாரண மக்கட்கு புரியுமாறு பக்தி வழியைப் பாடல்கள் மூலமும் பஜனை பத்ததிகள் மூலமும் போதித்துள்ளார்கள்.

மஹான்களும் நம்மைப் போன்றே சாதாரணக் குடும்பங்களில் பிறந்து வாழ்வில் மிகப்பல துன்பங்களை அனுபவித்துச் செய்வது தெரியாமல் திகைத்துக் கடைசியில் கடவுளே கதி என்று உணர்ந்து அனைத்தையும் துறந்து உன்னத மார்கத்தை அடைந்தார்கள். சமிபகாலத்தில் வாழ்ந்த மஹான்களின் சரிதங்களைப் படித்தால் இந்த உண்மை தெரியவரும். நம்மைப் போன்று சுகங்களைத் தேடி அலையும் சராசரி மனிதர்கள் தொல்லைகளிலிருந்து விடுபட அவர்களின் சரித்திரம் மிகவும் பயன்படும். நம் ஒவ்வொருவரின் வாழ்கையும் விதவிதமான சூழ்நிலைகளையும் மற்றும் நிகழ்வுகளையும் கொண்டவை. அதனால் ஒரே நடைமுறை அனைவருக்கும் ஏற்றதல்ல. நமக்கு ஒத்த நடைமுறைகளை நாமேதான் கண்டுபிடித்து அனுசரிக்க வேண்டும்.

உதாரணமாக இருட்டில் நாம் ஒரு கடற்கரையில் தனியாக நடந்து கொண்டிருக்கிறோம். எங்குப் போவது என்று திசை தெரியாமல் தவிக்கிறோம். அப்போது திடிரென்று தொலைதூரத்தில் ஒரு விளக்கொளி தெரிகிறது. அது ஒரு கடற்கரைவிளக்கத்தின் ஒளி. உடனே நமக்கு அதிகத் தைரியம்வந்து அவ்வொளியை நோக்கி நடக்கத் துவங்குகிறோம்.

மஹான்களும் இவ்விளக்கொளிக்கு ஒப்பானவர்தாம். ஆனால் நம் பொறுப்பு அனைத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் நம் துன்பம் அனைத்தும் உடனே விலகிவிடும் என்றும் நினைப்பது மதியீனம். நமக்குப் பசி ஏற்பட்டால் நாம்தான் உணவை தேடி அலைந்து கண்டுப்பிடித்து உண்ண வேண்டும். மற்றவர்கள் உண்பதால் நம் பசி அடங்காது. மஹான்களை நாம் முன்னேற இலக்குகளாகக் கொள்ளலாம். ஆனால் நாம் நம்மை மாற்றிக் கொள்ளாமல் மஹான்கள் அனைத்தையும் மாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு.

நம்மில் உயர்ந்த மஹான்கள் நமக்கு எவ்விதத்தில் உதவுகிறார்கள்? காரிருளில் அகல்விளக்கு ஒன்றை ஏற்றி வைக்கிறோம். அதன் சிறிய மொட்டு போன்ற சுடர் காண்பவர்க்குத் தைரியத்தையும் மனமலர்ச்சி யையும் தருகிறது. மஹான்களும் அம்மாதிரியே. அவர்களின் தொடர்பு நம்மை இவ்வுலகத் துன்பச்சூழலிலிருந்து உடனே விடுவிக்கிறது. சந்தனக்கட்டை தேய்ந்து தேய்ந்து சுற்றிலும் நறுமணத்தைப் பரப்புகிறது. மஹான்களும் அம்மாதிரியே. அவர்களுடன் பழகுவதால் உலகின் மாயை அகல ஆரம்பிக்கிறது. வாழ்வின் லட்சியம் பொருளின்பம் அல்ல, மனசாந்தியே என்று தெரிய வருகிறது. நம் மனம் மகான்களைத் தொழுகிறது மற்றும் உத்தமர்கோர் ஆலயம் எழுப்ப விரைகிறது.